மட்டக்களப்பு மயானத்தில் தூக்கில் தொங்கிய சடலத்தால் பரபரப்பு

மட்டக்களப்பு மயானத்தில் தூக்கில் தொங்கிய சடலத்தால் பரபரப்பு

மட்டக்களப்பு – கள்ளியங்காடு இந்து மயானத்தில் ஆண் ஒருவர் மயான கட்டிடத்தின் கூரையில் இன்று (03) புதன்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐந்து பிள்ளைகளின் தந்தை

சம்பவத்தில் இருதயபுரம் இரண்டாம் குறுக்கு வீதியை சேர்ந்த 47 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான கிலெனி அலோசியஸ் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் கூறியுள்ளனர்.

மட்டக்களப்பு

மரணத்திற்கான தௌிவான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button