கணவரை சங்கிலியால் கட்டி ஆணுறுப்பை வெட்டிய மனைவி!
ஆணுறுப்பை இழந்த கணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை குறித்த தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை.
கணவரை சங்கிலியால் கட்டி ஆணுறுப்பை வெட்டிய மனைவி! கணவரின் கை கால்களை செயினால் கட்டி வைத்து மனைவி ஒருவர் அவரது ஆணுறுப்பை வெட்டி எடுத்துள்ளார். நினைத்தாலே பதற வைக்கும் இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள அதியபாயா நகரில் 39 வயதுடைய கணவனுடன் மனைவி வசித்து வந்துள்ளார். இதற்கிடையே 15 வயதுடைய உறவுப் பெண்ணுடன் கணவன் பாலியல் உறவு வைத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி, கணவின் கை மற்றும் கால்களை சங்கிலியால் கட்டி வைத்து விட்டு, பின்னர் அவரது ஆணுறுப்பை கத்தியால் வெட்டி எடுத்துள்ளார்.

இதையடுத்து வெட்டி எடுக்கப்பட்ட ஆணுறுப்பை செல்போனில் போட்டோ எடுத்துக் கொண்ட பின்னர், அதனை கழிவறைக்குள் வீசி ஃப்ளஷ் செய்துள்ளார். இதனால் கணவின் ஆணுறுப்பு, கழிவறை தொட்டுக்கு உள்ளே சென்று விட்டது.