இலங்கையில் மிளகாய் தூள் வாங்குவோருக்கு எச்சரிக்கை!
இலங்கையில் மிளகாய்தூள் வாங்குவோருக்கு எச்சரிக்கை!
இலங்கையில் மிளகாய்த்தூளில் பாண் தூள் மற்றும் பழைய அரிசிமா என்பனவற்றினை கலந்து விற்பனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, புறக்கோட்டை சுற்றியுள்ள கடைகளில் இந்த மிளகாய் தூள் விற்பனை மோசடி இடம்பெற்று வருவதாக நுகர்வோர் சேவை அதிகார சபைக்கு தகவல் கிடைத்துள்ளது.
குறித்த மோசடி சம்பவம் கொழும்பு – கிரேன்பாஸ் பகுதியில் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.
புறக்கோட்டை பகுதியில் உள்ள மொத்த விற்பனை நிலையங்களில் இருந்து அகற்றப்பட்ட பாண் தூள் மற்றும் பழைய அரிசி மா என்பன இவற்றிற்கு பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.