விஜயகாந்த் தமிழ் திரையுலகின் சகாப்தம் : பிரதமர் மோடி இரங்கல்

விஜயகாந்த் தமிழ் திரையுலகின் சகாப்தம் : பிரதமர் மோடி இரங்கல்

விஜயகாந்த் தமிழ் திரையுலகின் சகாப்தம் : பிரதமர் மோடி இரங்கல் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்த நிலையில், இந்திய பிரதமர் மோடி விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும் சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாக தேமுதிக தலைமை கழகம் காலை அறிவித்திருந்த நிலையில் விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விஜயகாந்த்

பிரதமர் மோடி இரங்கல் செய்தி

இதைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள், தொண்டர்கள் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில் பிரதமர் மோடி விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

தமிழ் திரையுலகின் சகாப்தமாக திகழ்ந்தவர் விஜயகாந்த். தனது சிறப்பான நடிப்பால் கோடான கோடி மக்களின் இதயங்களை வென்றவர்.

பொதுசேவையில் முழுமையாக தன்மை ஈடுபடுத்திக்கொண்ட அரசியல் தலைவர் விஜயகாந்த் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவது கடினம். எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர் விஜயகாந்த் என்றும் பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button