மட்டக்களப்பு வாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு நகரிலுள்ள வாவியில் இருந்து இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று மட்டு. தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நகரிலுள்ள வாவியில் இருந்து இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று மட்டு. தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (14) இரவு மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையிலேயே சடலம் சிக்கியுள்ளது.

Advertisements

இதையடுத்துச் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் 60 வயதுக்கு மேற்பட்டவர் எனவும், சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisements

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Click To Watch





This will close in 20 seconds