பீகாரில் ரயில் விபத்து: 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் செல்லும் அதிவிரைவு புகையிரதத்தின் (12506) 3 பெட்டிகள் பீகாரில் உள்ள ரகுநாத்பூர் புகையிரத நிலையத்தின் அருகே (10.10.2023) இரவு 9.35 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் பல பயணிகள் காயம் அடைந்துள்ளனர். மேலும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

காயம் அடைந்த பயணிகளை மீட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பீகாரில் ரயில் விபத்து: 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
மருத்துவ குழுவினர் மற்றும் அதிகாரிகளுடன் விபத்து நிவாரண வாகனம் சம்பவ இடத்திற்கு புறப்பட்டுள்ளதாக கிழக்கு மத்திய புகையிரதத் திணைக்களம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து விபத்து குறித்து தகவல் அறிய புகையிரத சேவை தரப்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பீகாரில் ரயில் விபத்து: 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button