சமையலறையில் மீட்கப்பட்ட 14 சடலங்கள்; சிக்கிய கொடூர கில்லர்
ருவாண்டா நாட்டில் வீட்டின் சமையலறையில் இருந்து 14 சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் 34 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், இரவு விருந்தில் சந்திக்கும் நபர்களை தமது வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது. பின்னர் அவர்களை கொலை செய்து வீட்டின் சமையலறையில் குழி தோண்டி புதைத்துள்ளார்.
கடந்த ஜூலை மாதத்தில் கொள்ளை, பாலியல் பலாத்காரக் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட குறித்த நபர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் து, அவரின் வீட்டில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.