பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட சோற்றுப் பார்சலுக்குள் ஐஸ் போதைப்பொருள்
பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர் ஒருவருக்கு கொண்டு வரப்பட்ட சோற்று பார்சலில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் பொதியை அனுப்பி வைத்த சந்தேக நபரின் மனைவியை கைது செய்ய சென்ற பின்வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் சார்ஜன்ட் ஆகியோரின் கையே கடித்து விட்டு பெண் தப்பியோட முற்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் காவலில் உள்ள போதைப்பொருள் சந்தேக நபரின் நண்பருக்கு அவருடைய மனைவி இந்த சோற்று பொதியை அனுப்பி வைத்துள்ளார். சோற்று பார்சல் மீது சந்தேகம் அடைந்த போலீசார், அதை ஆய்வு செய்த போது, பெரிய மீன் துண்டில் ஐஸ் போதைப்பொருள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்படி, பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் சந்தேக நபரை கைது செய்வதற்காக வீட்டுக்குச் சென்ற போது, சந்தேக நபர் பொலிஸ் அதிகாரிகளை கடித்துவிட்டு ஓட முற்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சந்தேகநபரிடம் மேலும் ஐந்து ஐஸ் போதைப்பொருள் பொதிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.