சுவிற்சர்லாந்தில் சரிந்து விழும் பாறைகள் – அவசரமாக வெளியேற்றப்பட்ட மக்கள்

சுவிற்சர்லாந்தில் உள்ள கிராமம் ஒன்றில் இருந்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

சுவிற்சர்லாந்தில் அமைந்துள்ள அல்ப்ஸ் மலைப் பகுதியில் இருக்கும் பிரையன்ஸ் என்ற ஒரு அழகிய கிராமத்திலிருந்தும் பண்ணைகளை விட்டுமே மக்கள் இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சுவிற்சர்லாந்தில், சரிந்து விழும் , பாறைகள் , அவசரமாக, வெளியேற்றப்பட்ட ,மக்கள்

மலையிலிருந்து பாறைகள் சரிந்து விழுவதால் உடனடியாக அக்கிரமத்திலிருந்து மக்கள் வெளியேற்பட்டனர்.

அல்பைன் மலையின் மேல்பகுதியில் உள்ள சுமார் இரண்டு மில்லியன் கனமீட்டர் பாறைகள் விரைவில் சரிந்து விழும் என சுவிஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.

பல தலைமுறைகளாக மலையில் அரிப்பு ஏற்பட்டதால் மலையிலிருந்து வெள்ளை, சாம்பல், மஞ்சள் நிறத்தில் பாறைகளும் மண்ணும் சரிந்து விழுகின்றன.

விழுகின்ற பாறைகள் கிராமத்தின் எல்லையில் அண்மிப்பதால் மக்கள் வெளியேற்றப்பட்டனர். போக்குவரத்து வீதிகளும் தடை செய்யப்பட்டன.

ஆங்காங்கே பாறைகள் மோதும் சத்தம், பாறைகளின் சிறிய எச்சங்கள் நேற்ற வெள்ளிக்கிழமை மலை முகப்பிலிருந்து கீழே சரியும் போது ஏற்படும் சத்தம் கிராமத்திற்கு ஒரு வினோதமான உணர்வைக் கொண்டு வந்தன.

https://youtu.be/pBSq7pZwL3U

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button