ஆஸ்திரேலியாவில் கோர விபத்து – வெளிநாட்டவர்கள் உட்பட ஐவர் பலி

ஆஸ்திரேலியாவில், கோர விபத்து , வெளிநாட்டவர்கள் ,உட்பட, ஐவர் பலி

ஆஸ்திரேலியாவில் நேர்ந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பரபரப்பான நெடுஞ்சாலைக்குள் நுழையுமுன், வாகன ஓட்டுநர் ஒருவர் வழிவிட மறுத்ததால் அந்த விபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisements

உயிரிழந்தவர்களில் தைவானையும் ஹொங்காங்கையும் சேர்ந்த ஊழியர்களும் அடங்குவர் என நம்பப்படுகிறது.

வாகனத்தை ஓட்டிச்சென்று உயிரிழந்த பெண்ணிடமே ஏனையோர் பணிபுரிந்தனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகனமோட்டியோடு நபர் ஒருவரும் பெண்கள் மூவரும் அந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

ஆபத்தான வகையில் வாகனமோட்டி மரணம் விளைவித்ததாக 29 வயது நபர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

விபத்து நேர்வதற்குச் சில நிமிடங்கள் முன்பு மிதமிஞ்சிய வேகத்தில் சென்றதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

விபத்து நேர்வதற்கு ஒரு நாளைக்கு முன், தாம் கஞ்சா புகைத்ததை அந்த நபர் ஒப்புக்கொண்டுள்ளார்.

Advertisements

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button