யாழில் திடீர் தீ விபத்து ; பணம் கோரி நேரத்தை வீணடித்த தீயணைப்பு படையால் கருகிய வீடு!

யாழ்.சுண்டுக்குளி – விதான்ஸ் லேண் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று காலை திடீர் தீ விபத்து இடம்பெற்றிருக்கின்றது.

இந்நிலையில் யாழ்.மாநகரசபை தீயணைப்பு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அவர்கள் அதற்கான பணத்தை முதலில் கோரியுள்ளனர்.

யாழில், திடீர் தீ விபத்து ,பணம் கோரி , தீயணைப்பு படையால் ,கருகிய வீடு

வீட்டின் ஒரு பகுதி தீயினால் நாசம்

அதன் பின்னர் சம்பவம் தொடர்பில் முன்னாள் மாநகரசபை உறுப்பினர்கள் தலையிட்டு பின்னர் தீயணைப்பு வாகனம் கொண்டுவரப்பட்டு தீ அணைக்கப்பட்டபோதும், வீட்டின் ஒரு பகுதி தீயினால் எரிந்துள்ளது.

யாழில், திடீர் தீ விபத்து ,பணம் கோரி , தீயணைப்பு படையால் ,கருகிய வீடு

இந்த விடயம் தொடர்பாக யாழ்.மாநகரசபை முன்னாள் உறுப்பினர் ஒருவர் கூறுகையில்,

இன்று காலை தீ விபத்து ஏற்பட்டபோது அது குறித்து யாழ்.மாநகரசபை தீயணைப்பு பிரிவுக்கு நேராக சென்றும், தொலைபேசி மூலமும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

யாழில், திடீர் தீ விபத்து ,பணம் கோரி , தீயணைப்பு படையால் ,கருகிய வீடு

 

எனினும் அதற்கான பணத்தினை கட்டுவதாக உத்தரவாதம் தாருங்கள் என கேட்கப்பட்டுள்ளது. ஆனால் அப்படி பணம் அறவிடுவதற்கான எந்தவொரு நடைமுறையும் இல்லை என தெரிவித்த அவர், மாநகரசபை ஆணையாளரும் அவ்வாறான பணிப்பை வழங்கவில்லை என குறிப்பிட்டார்.

யாழில், திடீர் தீ விபத்து ,பணம் கோரி , தீயணைப்பு படையால் ,கருகிய வீடு

இதேவேளை மின் ஒழுக்கு காரணமாக இந்த தீ விபத்து இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழில், திடீர் தீ விபத்து ,பணம் கோரி , தீயணைப்பு படையால் ,கருகிய வீடு

பணம் கோரி நேரத்தை வீணடித்த தீயணைப்பு படையால் வீட்டின் பகுதி தீயினால் பாதிக்கப்பட்டுள்ளமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழில், திடீர் தீ விபத்து ,பணம் கோரி , தீயணைப்பு படையால் ,கருகிய வீடுயாழில், திடீர் தீ விபத்து ,பணம் கோரி , தீயணைப்பு படையால் ,கருகிய வீடு யாழில், திடீர் தீ விபத்து ,பணம் கோரி , தீயணைப்பு படையால் ,கருகிய வீடு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button