ஜெர்மனி பொலிஸார் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

ஜெர்மனி நாட்டின் பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஜெர்மனிய பொலிஸாரின் கடந்த கால நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்து தற்பொழுது அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் பிரகாரம் ஜெர்மன் பொலிஸார் வீடு வாசல்கள் அற்றவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது பாரபட்சமான முறையில் நடந்து கொள்கின்றார்கள் என்று இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் பலர் அசௌகரிகத்தை மேற்கொண்டு வருவதாக தெரிய வந்திருக்கின்றது.

மேலும் பொது மக்களை பாதுகாக்கும் பொலிஸாரின் இந்த நடவடிகையானது பலர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளையில் ஜெர்மன் பொலிஸாருக்கு வேலைப்பழு உள்ளதாகவும் 25 வீதமான பொலிஸார்கள் ஒரு தடவையாவது தனது மேலதிகாரியுடைய கட்டளைக்கு இசைந்து நடவடிக்கைகளில் ஈடுப்படவில்லை என்றும் தெரியவந்திருக்கின்றது.

ஜெர்மனி ,பொலிஸார், தொடர்பில் ,வெளியான ,முக்கிய தகவல்
இந்த அறிக்கை சம்பந்தமாக ஜெர்மனியின் உள்ளுர் ஆட்சி அமைச்சர் நான்ஸி பாஸ்ட் அவர்கள் கருத்து வெளியிடுகையில் ஜெர்மன் நாட்டில் இன வாதத்திற்கு எவ்விதமான இடத்தையும் தான் அளிக்க மாட்டேன்.

மேலும் இந்த அறிக்கையின் தொடர்பில் தான் கூடிய கவனத்தை மேற்கொண்டு இது தொடர்பில் புதிய சில திருத்தங்களை மாற்றங்களில் கொண்டு வருவதற்கு தான் முயற்சி செய்யப்போவதாகவும் கூறி இருக்கின்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button