சுவீடனில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐந்து பேர் அதிரடியாக கைது

சுவீடனில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குத் திட்டமிட்ட 5 சந்தேக நபர்களை தான் கைது செய்துள்ளதாக சுவீடன் இன்று தெரிவித்துள்ளது.

குர் ஆன் எரிப்பு

சுவீடனிலுள்ள துருக்கிய தூதரகத்துக்கு முன்னால், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின்போது, ஆர்ப்பாட்டக்காரர்களால் புனித குர் ஆன் எரிக்கப்பட்டது.

மேற்படி சம்பவத்தின் பின்னர், பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுவதற்குத் திட்டமிட்ட 5 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக சுவீடனின் ரகசிய சேவைப் பிரிவினர் இன்று தெரிவித்துள்ளனர்.

இவர்கள் சர்வதேச இஸ்லாமிய தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என சுவீடனின் ரகசிய சேவைப் பிரிவின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் பிரதித் தலைவர் சுசானா ட்ரேஹோர்னிங் கூறியுள்ளார்.

அதோடு ‘குர்ஆன் எரிப்பு தொடர்பில் நாம் செயற்பட்டுக்கொண்டிருக்கும் பல வழக்குகளில் ஒன்று இது’ எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button