ஒட்டாவாவில் சீரற்ற காலநிலையினால் போக்குவரத்து பாதிப்பு
ஒட்டாவாவில் சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஒட்டாவாவின் மேற்கு பகுதி அதிவேக நெடுஞ்சாலைகளில் சில விபத்துக்களும் இடம்பெற்றுள்ளன.விபத்துக்கள் காரணமாக சில பாதைகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடுமையான பனிபபொழிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாரதிகள் மிகவும் நிதானமாக வாகனங்களை செலுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காலை 6 மணி முதல் காலை 8.45 மணி வரையில் அதிகவேக நெடுஞ்சாலைகளில் 19 வாகன விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
பாதையின் நிலைமையை கருத்திற் கொண்டு வாகனங்களை செலுத்துமாறு சாரதிகளிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக சில பகுதிகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒட்டாவாவில் நாளைய தினம் பனிமழை பொழியும் எனவும் மிகவும் குறைந்தளவு வெப்பநிலை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.