தமிழர் பகுதியில் குப்பிவிளக்கால் பறிபோன பிஞ்சுக் குழந்தையின் உயிர்!

தமிழர் பகுதியில் குப்பிவிளக்கால் பறிபோன பிஞ்சுக் குழந்தையின் உயிர்! முல்லைத்தீவு – விசுவமடு பகுதியில் குப்பி விளக்கு சரிந்து விழுந்ததில் படுகாயமடைந்த 6 மாத குழந்தை யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் விசுவமடு பகுதியைச் சேர்ந்த கஜீபன் பிரசாத் எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தமிழர் பகுதியில், குப்பிவிளக்கால், பிஞ்சுக் குழந்தை, உயிர்

வீட்டின் வெளியே யானைகளின் சத்தம்

விசுவமடுவில் உள்ள வீட்டில் கடந்த 23 ஆம் திகதி இரவு தாயுடன் குழந்தை உறங்கிக்கொண்டிருந்தவேளை வீட்டின் வெளியே யானைகளின் சத்தம் கேட்டுள்ளது.

இதனையடுத்து , தாய் வீட்டின் வெளியே சென்று பார்த்த போது, குழந்தை படுக்கையில் உருண்டு, குப்பி விளக்கினை தட்டி விழுத்தியுள்ளது.

அதனால் ஏற்பட்ட தீ பரம்பலில் குழந்தை சிக்கி , தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் குழந்தையை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (30) சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button