பிரான்ஸில் இடம்பெற்ற பயங்கர துப்பாக்கிச்சூடு; இருவருக்கு நேர்ந்த சோகம்!
பிரான்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் Maurepas (Rennes) நகரில் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் இருவரே கொல்லப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரிகள், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பி ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.