மட்டக்களப்பு - முனைக்காடு, தெற்கு வீட்டுத்திட்டப் பகுதியில், 5 பிள்ளைகளின் தந்தையான இரட்ணசிங்கம் உதயன் (35 வயது) நேற்று இரவு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என, கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தை, இன்று காலை பார்வையிட்ட நீதிபதி எம்.றிஸ்வான், சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறு பணித்தார்.
அத்தோடு, சம்பவ இடத்துக்கு வருகை தந்த மட்டக்களப்பு குற்றத்தடவியல் பிரிவு பொலிஸாரும் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லையெனத் தெரிவித்த கொக்கட்டிச்சோலை பொலிஸார், சம்பவம் தொடர்பிலான தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தனர்.
0 Comments